Tuesday, April 23, 2024
Homeஎழுத்தாக்கங்கள்”இஹ்ஸான்” என்றால் என்ன?

”இஹ்ஸான்” என்றால் என்ன?

الإحسان أن تعبد الله كأنّك تراه، فإن لم تكن تراه فإنّه يراك ‘ هذه العبارة قطعة من حديث طويل ، والحديث مشهور طويل لا حاجة إلى ذكره بالتّمام،

وههنا نكتة ذوقيّة، فهِمَهَا بعضُ العارفين حيث قال ‘ تَكُنْ ‘ تامّة، لا ناقصة ، بمعنى تُوْجَدُ ، أي فإن لم تُوجد ، بأن فنيت فيه، فإنّك تراه، أي إذا تحقَّقْتَ بمقام الفناء نِلْتَ مقام الشهود، وهو الرؤية القلبيّة، الّتي تصير فى الآخرة بصريّةً، ولا يُشكل على ذلك أنّ مُقتضى هذاالمعنى أن يكون ‘ تراه ‘ جواب الشـرط، ومقتضـى قواعد العربيّة حذف الألف من ‘ تراه ‘ لأنّه مجزوم جوابا للشـرط، لأنّا نقول إن بعض العرب يُبقى مثل هذه الألف فى الفعل المجزوم، فلا مانع أن يخرج ذلك على تلك اللّغة، لإفادة هذا المعنى اللّطيف ، ويكون قوله (فإنّه يراك)كلاما مُستَئْنَفًا،

المتصوّفون القائلون بوحدة الوجود يؤوّلون هذا الحديث كما سبق، وإنّهم لا يجعلون قول الرّسول (فإنّه يراك ) جوابا للشرط المتقدّم ذكره، وهو ( فإن لم تكن تراه ) ولكنّهم يجعلون ‘ تَرَاهُ ‘ جوابا للشـرط، ويجعلون ‘ الفاء ‘ من قوله ‘فإنّه يراك ‘ تعليلا،

وأمّا العلماء الّذين ينكرون وحدة الوجود ويَحُكُّون بدنهم فوق الثوب ويسبحون فوق الماء فلا يقبلون هذا التأويل الذي قلناه، لكونهم محجوبين بالحجب الظلمانيّة ولظنّهم أنّ التأويل مخالف للكتاب والسنّة، وهذا التأويل يزيدنا ملكة روحيّة تجذب قلوبنا إلى الوحدة والعينيّة ، وتخرجنا من ظلمة الكثرة والغيريّة،

وأمّا جعل جملة ‘ فإنّه يراك ‘ جوابا للشـرط غير مناسبٍ معنًى، ولا يخفى هذا الأمر على من بحث بحثا عميقا ، أو سئل من قلبُه مفتوح،

“இஹ்ஸான்” என்பது நீ அல்லாஹ்வைப் பார்ப்பவனைப் போன்று வணங்குவதாகும். நீ அவனைக் காணவில்லை என்றாலும் அவன் உன்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான். இவ்வசனம் பிரபல்யமான நீண்ட ஹதீதில் நின்றும் ஒரு வசனமாகும். அந்த ஹதீதை இங்கு முழுமையாகக் குறிப்பிடுவது அவசியமில்லை என்பதால் சுருக்கிக் கொள்கின்றோம்.

இங்கு அனுபவ ரீதியான ஒரு நுட்பம் இருக்கின்றது. அதை ஆரிபீன்களில் சிலர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள். இவ்வசனத்தில் வந்துள்ள “தகுன்” என்ற சொல் “கான” என்ற சொல்லடியிலிருந்து வந்ததாக இருந்தாலும், வழமையாக “கான” (ஆனான் என்ற கருத்தின் அடிப்படையில்) என்பதற்கு “நாகிஸ்” என்ற அடிப்படையில் ஒரு இஸ்ம், ஒரு “கபர்” அவசியமாகும். ஆனால் இங்கு வந்துள்ளது அவ்வாறில்லாமல் “தாம்” (ஒரு வஸ்த்து ஆகியிருத்தல், உண்டாகியிருத்தல்) என்ற அடிப்படையில் உள்ளதாகும். அதாவது அதன் கருத்து நீ அல்லாஹ்வில் “பனா” ஆகி நீ இல்லை என்றால் நீ அவனைக் காண்பாய். “பனா” உடைய நிலையை நீ அடைந்தால் காட்சி நிலையை நீ பெற்றுக் கொள்வாய். அது மறுமையில் தலைக் கண்ணால் காணக்கூடிய காட்சியை இவ்வுலகில் நீ உள்ளத்தால் காண்பதாகும். இந்தக் கருத்தின் அடிப்படையில் பின்னால் வரும் “தறாஹு” என்பது “நீ இல்லை என்றால்” என்ற நிபந்தனையின் பதிலாக வருவதில் சிக்கல் ஏதுமில்லை. ஏனெனில் அறபு இலக்கணப்படி இது போன்ற வசனங்களில் பதிலாக (ஜவாபாக) வரக் கூடியது முழாரியான பிஅலாக இருந்தால் அதில் அலிபை நீக்கி “தறஹூ” என்றே சொல்ல வேண்டும். ஆனால் அறபுகளில் சிலர் இது போன்றதில் அலிபைத் தரிபடுத்தியும் பாவித்திருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் இந்த ஹதீதை விளங்குவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. இக்கருத்து நுட்பமான ஒரு தத்துவத்தை எமக்கு காட்டி நிற்கின்றது. மேலும் “பஇன்னஹூ யறாக” என்ற நபீகளாரின் சொல்லாகிறது தனி வசனமாகும்.

“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசக் கூடிய ஸூபிய்யாக்கள் இந்த ஹதீதை இவ்வாறே விளங்கப்படுத்துகின்றார்கள்.

நீரின் மேல் நீந்தக்கூடிய, ஆடையின்மேல் சிராய்க்கக் கூடிய “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை எதிர்க்கக் கூடிய உலமாக்கள் நாம் கூறிய இவ்விளக்கத்தை ஏற்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இருற்திரைகள் கொண்டு திரையிடப்பட்டவர்களாக இருப்பதினாலும், இவ்வலிந்துரை அல் குர் ஆன், ஹதீதுக்கு மாற்றம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பதினாலுமாகும். இவ்விளக்கம் எங்களுக்கு றூஹானிய்யத்தான் தன்மையை அதிகப்படுத்துவதுடன், எங்கள் உள்ளங்களை ஏகத்துவம், அத்துவிதத்தின் பால் இழுத்துச் செல்கின்றது. மேலும் வேற்றுமை மற்றும் ஏகத்துவத்திற்கு மாற்றமான கொள்கைகளை விட்டும் பாதுகாக்கின்றது.

மேலும் இவ்வசனத்தில் “பஇன்னஹூ யறாக” (அவன் உன்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்) என்ற சொல்லை முன்னால் வந்த நிபந்தனைக்கு பதிலாகக் கொடுப்பது பொருத்தமற்றதுமாகும். இவ்விடயம் ஆழமாக ஆராயக்கூடிய அல்லது உள்ளம் திறந்த ஒருவரிடம் கேட்டறிபவனுக்கு மறைவானதல்ல.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments