Thursday, March 28, 2024
Homeஎழுத்தாக்கங்கள்புகழ்மாலை சூடிய மனிதப் புனிதர்கள்

புகழ்மாலை சூடிய மனிதப் புனிதர்கள்

 – ஆக்கம் – சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹி நாயகம் –

وأمّا من أثْنَى على الشيخ محي الدين ابن عربي قُدِّس سره من العلماء، ومَدَحَ مُؤَلَّفَاتِه فقد كان الشيخ مجد الدين الفيروزابادي رحمه الله – صاحب القاموس فى اللّغة، يقول (لم يَبْلُغْنَا عن أحدٍ من القوم أنّه بَلَغَ فى علم الشريعة والحقيقة مابَلَغَ الشيخُ محي الدين أبدا)، وكان يعتقد غاية الإعتقاد، ويُنكر على من أنكر عليه، ويقول لم تَزَلِ النّاسُ مُنكبِّيْنَ على الإعتقاد فى الشيخ وعلى كِتَابة مؤلَّفاتِة بِحَلِّ الذَّهَبِ فى حياته وبعد وفاتِه، إلى أنْ أراد اللّه تعالى ما أراد من انْتِصَابِ شخصٍ من اليمن، اسمه جمال الدين بن الخيّاط، فكتب مسائلَ فى درج وأرسَلَها إلى العلماء ببلاد الإسلام، وقال هذه عقائدُ الشيخ محي الدين ابن عربي ، وذَكَرَ فيها عقائدَ زائغةً ومسائِلَ خَارِقَةً لإجماع المسلمين، فكتب العلماء على ذلك بِحَسَب السُّؤال، وشنَّعُوا على من يعتقد ذلك من غيرِ تَثَبُّتٍ، والشيخ عن ذلك كلِّه بِمَعْزِلٍ

قال الفيروزابادي فلَا اَدْرِيْ اَوَجَدَ ابنُ الخيَّاط تلك المسائِلَ فى كتاب مدسُوسٍ على الشيخ؟ أو فَهِمَهَا هُوَ من كلام الشيخ محي الدين على خِلافِ مراده.[ اليواقيت – الأول – ص ٧ ]

مُؤَلّفٌ – مُؤَلَّفَاتٌ .நூல்கள் , இயற்றப்பட்டவை
بَلَغَ يَبْلُغُ – . அடைந்தான்
اعتَقَدَ يَعْتَقِدُ – . நம்புதல்
اِنْكَبَّ يَنْكبُّ – فلانٌ على قومه : كان منكبا لهم أي عونا
يعتمدون عليه.
اِنْتَصَبَ شَخْصٌ – . ஒருவன் முன் வந்தான்
دَرْجٌ – ஏடு – الدرج = ما يكتب فيه.
خَرَقَ يَخْرِقُ – . கிழித்தல் – முரண்படுதல்
شَنَّعَ – . எச்சரித்தல்
تَثَبُّتٌ – ஆய்வு
عَزَلَ – நீக்கினான்
اِنْعَزَلَ – நீங்கினான்

அஷ் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகம் அவர்களையும்,அவர்கள் எழுதிய நூல்களையும் புகழ்ந்துரைத்தவர்களில் “காமூஸ்” என்ற நூலை எழுதிய மஜ்துத்தீன் பைறூசாபாதீ றஹ் அவர்களும் ஒருவர். அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(இப்னு அறபீ நாயகம் அவர்கள் ஷரீஆ,தரீகா அறிவுகளில் நிகரற்று விளங்கினார்கள்.இறைஞான மேதைகளில் அவர்கள் அடைந்த இடத்தை வேறெவரும் அடைந்ததாக ஞான மகான்களால் எந்த ஒரு தகவலும் எமக்கு கிடைக்கவில்லை.)

பைறூசாபாதீ அவர்கள் இப்னு அறபீ றழி மீது உறுதியான நம்பிக்கை உள்ளவர்களாகவும், அவர்களை எதிர்ப்போரை எதிர்ப்பவர்களாகவும் இருந்தார்கள்.இப்னு அறபீ றழி அவர்கள் பற்றிக் கூறுகையில் மனிதர்கள் இப்னு அறபீ றழி அவர்கள் மீது நல்லெண்ணம் உள்ளவர்களாகவும், அவர்களின் நூல்களை அவர்கள் உயிரோடிருந்த காலத்திலும்,அவர்கள் மறைந்த பிறகும் தங்கமையால் எழுதுபவர்களாகவும் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாரிருந்தும் கூட எமன் நாட்டைச் சேர்ந்த கமாலுத்தீன் இப்னு கையாத் என்பவர் இவர்களுக்கு எதிராக எழுந்தார். அவர் பொய்யான, வழிகேடான கொள்கைகளை எழுதி இஸ்லாமிய நாடுகளிலுள்ள அறிஞர்களுக்கு அனுப்பி வைத்து தீர்ப்புக் கேட்டிருந்தார்.அவர் எழுதிய தவறான கொள்கைகளில் “இஜ்மாஉல் முஸ்லிமீன்” முஸ்லிம்கள் கருத்து வேறுபாடின்றிக் கூறிய விடயங்களுக்கு முரணான கருத்துக்களும் எழுதப்பட்டிருந்தன. இஸ்லாமிய நாடுகளின் அறிஞர்கள் எழுதப்பட்டிருந்த கேள்விகளுக்கான பதில்களை எழுதி மக்களை எச்சரித்தனர்.ஆயினும் மேற் கூறப்பட்ட மார்க்க விரோதக்கருத்துக்களில் இருந்து இப்னு அறபீ றழி அவர்கள் நீங்கிய நிரபராதி ஆவார்கள்.

எமன் நாட்டைச் சேர்ந்த இந்த வேலையை செய்த இப்னுல் கையாத் என்பவர் தான் எழுதிய கடிதத்தில் குறிப்பட்ட தவறான, வழிகேடான கொள்கையை இப்னு அறபீ அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட நூலில் இருந்து பெற்றுக் கொண்டாரா?அல்லது இப்னு அறபியின் மையக்கருத்தைப் புரிந்து கொள்ளாமல் அவரே தவறாக விளங்கி எழுதினாரா? என்பது எமக்குத் தெரியாது என்று பைறூசாபாதீ றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

[ அல்யவாகீத் – பாகம் – 01 -பக்கம் 07 ]

இமாம் இப்னு அறபி றழி அவர்களை விசமிகளிற் சிலரும்,விஷயம் விளங்காத பலரும் குறை சொன்னாலும் பிரசித்தி பெற்ற தலை சிறந்த இமாம்களும்,இறை ஞானிகளும் அவர்களை “குத்பு” என்று ஏற்றுக் கொண்டிருப்பதுடன் அவர்கள் கூறியுள்ள “வஹ்ததுல்வுஜுத்”இறையியல் தத்துவத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

قال الشيخ مجد الدين الفيروزابادي رحمه الله ” والّذي اَقُوۡلُه واَتَحقَّقُه واَدِيۡنُ اللهَ تعالی به أنّ الشيخ محي الدين كان شَيۡخَ الطريقۃِ حالاً وعلما.وإمام التَّحۡقِيۡقِ حقيقۃً ورَسۡما. ومُحۡيِيَ علومِ العارفين فعلًا واسما. إذا تَغَلۡغَلَ فِكۡرُ المرإِ فی طَرَفٍ من مَجۡدِه غَرِقَتۡ فيه خَواطِرُه. لِاَنَّه بَحۡرٌ لاتُكَدِّرُهُ الدِّلاءُ.وسَحَابٌ لاتَتَقَاصَی عنه الاَنۡوَاءُ. كانت دعواتُه تَخۡرِقُ السَّبۡعَ الطِّبَاقَ. وتَغۡتَرِفُ بَرَكَاتُه فتَمۡلَأُ الآفَاقَ. وهو يقينا فوق ما وَصَفۡتُه. وناطِقٌ بما كتبتُه. وغَالِبُ ظَنِّيۡ اَنَّنِيۡ ما اَنۡصَفۡتُهُ.”

[ اليواقيت – الاول : ص ٧ ]

الدّلۡوُ – مايُسۡتَسۡقَی به. يُذَكَّرُ ويُوَنَّثُ = ( به – وبها ) ج دِلَاءٌ

تَحَقَّقَ – اَتَحَقَّقَهُ – اَعُدُّهُ حَقًّا

دَانَ يَدِيۡنُ – اَلدِّيۡنۡ . மார்க்கமாக எடுத்தான்

تَغَلۡغَلَ – اَسۡرَعَ فی سيره . வேகமாக நடந்நதான்
دَخَلَ فِيۡهِ عَلَی تَعۡبٍ وَشِدَّۃٍ
ஒன்றில் சிரமத்துடன் இறங்கினான்.

ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழி அவர்களையும்,அவர்களின் இறையியற் கொள்கையையும் புகழ்ந்து கூறிய மகான்களில் “காமூஸ்”என்ற அறபு மொழி அகராதியை எழுதிய மஜ்துத்தீன் பைறூசாபாதீ அவர்களும் ஒருவர்.அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.(நான் உறுதியாகவும்,தெளிவாகவும் சொல்வதும்,நான் மார்க்கமாக கருதுவதும் என்னவெனில் அஷ்ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழி அவர்கள் அறிவாலும், அகமியத்தாலும் தரீக்காவின் “ஷெய்கு”குருவாகவும்,எதார்த்தத்தாலும், அடையாளத்தாலும் ஹகீகத்தின் இமாமாகவும் உள்ளார்கள்.ஒரு மனிதனின் சிந்தனைஅவர்களின் சிறப்பான் ஒரு பகுதியை ஆழமாக அறியுமாயின் அவன் அவர்களில் மூழ்கிட நேரிடிடும்.ஏனெனில் அவர்கள் வாளிகளால் கலக்கி விட முடியாத பெருங்கடல்.நட்சத்திரங்கள் அவர்களை விட்டும் தூரமாகாத மேகம்.அவர்களின் அருள்கள் அள்ளுண்டு சென்று ஆகாயத்தை நிரப்பும். அவர்களின் அழைப்பு ஏழு வானங்களையும் கீறிக் கிழித்துச் செல்லும்.அவர்களின் அருள் எல்லாக் கோணங்களையும் நிரப்பி விடும்.அவர்கள் எனது வர்ணணைக்கு அப்பாற்பட்டவர்கள்.என்னால் முடிந்தவரை அவர்களின் பெருமையை நான் கூறிவிட்ட போதும் நான் அவர்களை முழுமையாகப் புகழ முடிய வில்லை.)

மேற்கண்ட அறபு பந்தியை நூற்றுக்கு நூறு சரியாக மொழிபெயர்க்க என்னால் முடிய வில்லை.ஏனெனில் ஷெய்குல் அக்பர் றழி அவர்களின் “மஹப்பத்” அன்பில் “பனா” ஆன பைறூசா பாதீ அவர்கள் அறபு வசனங்களை மிக நாகரீகமான பாணியில் அள்ளிக் குவித்துள்ளார்கள்.

மேற்கண்ட பந்தியை உரிய முறையில் மொழியாக்கம் செய்யத் திறமையுள்ளவர்கள் மொழியாக்கம் செய்து எமக்கு அனுப்பினால் நாம் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

قال الفيروزابادي : [ وأمّا كُتُبُه رضي الله عنه فهي البِحارُ الزَّوَاخِرُ، الّتي ما وَضَع الواضِعُونَ مِثْلَهَا، ومن خَصائِصِها ما واظبَ أحدٌ على مطالعتِها إلّا وتَصدَّرَ لِحَلِّ المشكلات فى الدين ومُعْضَلَاتِ مسائله، وهذاالشأنُ لا يُوجَد فى كُتُبِ غيرِه أبدا

[ اليواقيت – الاول – ص ٧ ]

மேலும் பைறூசாபாதீ கூறுகையில் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். (ஷெய்குல் அக்பர் அவர்களின் நூல்கள் அலையெழுப்பும் பெருங் கடல்களாகும். அவை போன்ற நூல்களை எவரும் எழுதவில்லை.அவர்களின் நூல்களில் மட்டுமுள்ள விஷேடம் என்ன வெனில் அவற்றை வாசித்தவன் மார்க்கத்தில் ஏற்படுகின்ற எந்தச் சிக்கலான பிரச்சினையாயினும் அதை தீர்த்து வைப்பதற்கான ஆற்றலை பெற்று விடுவான். இத்தகைய ஒரு சிறப்பம்சம் வேறெந்த நூலிலும் இல்லை.)

قال وأمّا قولُ بعضِ المنكرين أنّ كُتُبَ الشيخ لا تَحِلُّ قِرَائَتُهُا ولا إقْرَائُها فَكُفْرٌ،

(ஷெய்குல் அக்பர் அவர்களை மறுப்பவர்களிற் சிலர் அவர்களின் நூல்களை வாசிப்பதும், மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதும் கூடாதென்று கூறுகின்றார்கள்.இக்கூற்று “குப்ர்”ஆகும்.அதாவது இவ்வாறு சொல்வது பாவம் மட்டுமல்ல.”குப்ர்”என்ற மத மாற்றத்தையும் ஏற்படுத்திவிடும்.)

ஷெய்குல் அக்பர் அவர்களின் நூல்கள் மட்டுமன்றி அவர்களின் கருத்தை – “வஹ்ததுல்வுஜுத்”ஞானத்தை – ஞானத்தை கூறுகின்ற எந்த ஒரு நூலையும் வாசிக்கலாகாதென்று சொல்பவர்கள் இக்காலத்திலும் இருக்கின்றார்கள். அறபுக் கல்லூரிகளில் ஓதிக்கொடுக்கின்ற ஹஸ்றத் மார்களில் சிலர் குறித்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ள நூல்களை இனம் கண்டு அவற்றை நூலகத்தில் வைக்காமல் தமது அறைகளில் மறைத்து வைத்தும் இருக்கின்றார்கள்.இத்தகைய அறிஞர்கள் திருக்குர்ஆன் பிரதிகளையும் நூலகத்தில் வைக்காமல் தடை செய்ய வேண்டும்.அதேபோல் திருக்குர்ஆன் ஓதுவதையும், ஓதிக் கொடுப்பதையும் தடை செய்ய வேண்டும்.

ஏனெனில் “வஹ்ததுல்வுஜுத்” ஞானத்தை வெளிப்படையாகவும், தெளிவாகவும் கூறுகின்ற வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருப்பதை மக்குகளைத் தவிர மற்றவர்கள் நன்கறிவர்.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அறவே இறைஞானம் தெரியாதவர்களிற் சிலரும், தெரிந்திருந்தும் மூளை கலங்கிவிடுமோ என்று பயந்த பலரும் “மஸ்தான் சாஹிபு பாடல்”நூலை பார்ப்பது கூடாதென்று தமது மக்களைத் தடுத்திருக்கின்றார்கள்.

நூறாண்டுகளை விடுவோம். 1979,1980 களில் வாழ்ந்த பாரசித்தி பெற்ற ஒரு ஹஸ்றத் அவர்கள் ஒரு நாள் ஒரு பள்ளிவாயலில் உரையாற்றும் போது (றஊப் மௌலவி சொல்லி வருகின்ற எல்லாம் அவனே என்ற கொள்கை இந்த தமிழ் புத்தகத்தில்தான் இருக்கின்றது என்று தனது கையில் இருந்த ஒரு புத்தகத்தை மக்களின் பார்வைக்கு காட்டி விட்டு அதை தனது ஜுப்பாக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்.)

இவர் காட்டிய தமிழ் புத்தகம் தமிழ் மொழியில் எழுதப்பட்ட இறையியலை-சரியான இறைஞானத்தை விளக்கி எழுதப்பட்ட நூலேயன்றி இந்துமத ஞானம் எழுதப்பட்ட நூல் அல்ல.அந்த நூல் மௌலானா அப்துர் றஹ்மான் லக்னவீ றஹ் அவர்கள் அறபு மொழியில் எழுதியكَلِمَةُ الْحَقِّ “கலிமதுல்ஹக்கி”-என்ற நூலின் தமிழாக்கமாகும்.

இந்தியா – தமிழ்நாடு மஞ்சக் கொல்லை அப்துர் றஹ்மான் என்பவரே அறபு நூலை “முஸ்லிம் அத்வைத மூல மொழி” என்ற பெயரில் தமிழ் மொழியாக்கம் செய்து வெளியாக்கினார்.

ஹஸ்றத் அவர்கள் சட்டைப் பைக்குள் மறைத்து வைத்துக் கொண்டதற்கான காரணம் “வஹ்ததுல்வுஜுத்”உள்மை ஒன்றே என்ற ஞானத்தை அவர் தனது அறியாமையால் இந்து மத ஞானமென்று விளங்கிக் கொண்டதேயாகும்.

இன்னும் அந்த ஹஸ்றத் அவர்கள் தனது பழைய நிலைபாபட்டிலேயே இருக்கின்றார்.இன்னும் கண் திறக்க வில்லை. அவர் கண் திறப்பாரா? என்பது கேள்விக்குறியே.அவர் கண் திறந்தால் தப்லீக் ஜமாஅத் அமைப்பிலுள்ள பலர் கண் திறந்து விடுவார்கள்.

அந்த ஹஸ்றத் அவர்கள் விரும்பினால் என்றாவது அல்ல இன்றாவது எம்மைச் சந்தித்தால் போதும்.அவரின் “கல்பு”க்கண் திறந்து இறைஞானம் அவர் நாவால் வழிந்தோடி ஆலம் அனைத்தையும் நிரப்பி விடும்.

وقال الشيخ مجدُ الدين فيروزابادي رحمه الله [ وقد قَدَّمُوا لي مرّۃً سؤالا، صُورتُه ما تقولُ فی الكُتُب المَنسُوبۃ إلی الشيخ محي الدين ابن عربي قُدِّسَ سرُّه كالفُصوص والفتوحات هل يَحِلُّ قِرائتُها وإقرائُها، وهل هي من الكتب المسمُوعۃ المَقۡرُوءَۃِ أم لا؟
فأجبتُ نعم، هي من الكتب المسموعۃ المقروءۃِ، وقد قَرَئَهَا عليه الحافظُ البَرۡزَلِيۡ وغيرُه، ورأيتُ إجازتَه بِخَطّ الشيخ محي الدين علی حَوَاشِی الفتوحات المكّيّۃ بِمَدِيۡنَۃِ قُوۡنِيَۃَ، وكِتَابَۃَ طَبَقَۃٍ بعدَ طَبَقَۃٍ من العلماء والمحدّثين، فمُطالعۃُ كتبِ الشيخ قُربۃٌ إلی الله تعالی، ومن قال غَيۡرَ ذلك فهو جاهلٌ زَائِغٌ عن طريق الحقّ، فلقد كان الشيخُ وﷲِ في زَمنه صاحبَ الوِلايۃِ العُظۡمَی، والصِّدِّيۡقَۃِ الكُبۡرَی فيما نَعۡتَقِدُ ونَدِيۡنُ ﷲَ تعالی به، خِلافَ ما عليه جماعۃٌ مِمَّنۡ مقتهم ﷲ تعالی فَحُرِمُوا فوائِدَه، وَقَعُوا فی عِرضِه بُهۡتانا وزُوۡرًا، وحَاشَا جَنابُه الكريم أن يُخَالِفَ كلام نَبِيِّهِ الذي اِسۡتَأْمَنَهُ علی شَرۡعهِ، ومن أنكر عليه وقع فی اَخۡطَرِ الامور. انتهی كلام الشيخ مجد الدين رحمه ﷲ.

[ اليواقيت – الاول – ص ٧ ]

قَدَّمَ – முன்வைத்தான் – முற்படுத்தினான்
قَدَّمَ مُزَمِّلٌ رِسَالَۃَ لِيۡ
முசம்மில் எனக்கு ஒரு கடிதம் தந்தான்.”வித்தரிய்யா”பாடல் “பஸ்மலா” கொண்டு ஆரம்பிக்கப்படாத ஒன்றாகும். இருந்தாலும் اُقَدِّمُ بِسۡمِﷲِ جَلَّ وقَدۡسَمَا என்று ஆரம்பிக்கப்பட்டிருப்பது “பஸ்மலா”சொன்னதற்கு ஒரு வகையில் சமமானதேயாகும்.

قَرأَ – ஓதினான் . اَقۡرَأَ – ஓதிக்கெடுத்தான்
الكُتُبُ اْلمَسۡمُوۡعَۃُ – معناها الكُتُبُ المَقۡبُوۡلَۃُ – الكُتُب الۡمُعۡتَمَدَۃُ
قَرَأَ عليه = قَرَأَ البرزليُّ علی الشيخ ابن عربي : معناه تعلّم
البرزليّ من ابن عربي.
اِجَازَۃُ الخَطِّ = கையெழுத்து அனுமதி
حَاشِيَۃٌ – ஓரம் – ج حَوَاشِي
قُوۡنِيَۃ = اِسۡمُ بَلَدٍ . مدينۃ تُرۡكِيّۃ فی الأَنَاضُول،

١)القُوۡنَوِيۡ – عصام الدين اسماعيل [ ١١٩٥ ه . ١٧٨۰ م ]
فقيهٌ حنفيّ، غَلَبَ عليه التفسير. ولد فی قُونيۃ
وتُوفّي فی دمشق،

٢) القُونَوِي = صدر الدين الرّوميّ. [ ٦٧٣ ه ١٢٧٥ م ]
شافِعيُّ المذهب. وُلِد وتُوُفّي بقُونيۃ، أخذ
عن شيخ الأكبر ابن عربي الذي كان زوجَ اُمِّه.
جرت بينه وبين نصير الدين الطُّوسِيْ مكاتبات
فی مَسائِلَ فَلۡسَفِيَّۃٍ،

அஷ் ஷெய்கு மஜ்துத்தீன் பைறூசாபாதீ றஹ் அவர்கள் மேலும் கூறுகையில் (என்னிடம் ஒரு கேள்வி வந்தது.அதில் அஷ் ஷெய்கு இப்னு அறபீ றஹ் அவர்கள் எழுதிய “புதூஹாதுல் மக்கிய்யா”,”புஸுஸுல்ஹிகம்” முதலான நூல்களை வாசிப்பதும் , அவற்றை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதும் “ஹலால்”மார்க்கம் அனுமதித்த விடயமா?இல்லையா?அவர்களின் நூல்கள் வாசிப்பதற்கும், மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கும் தகுதியானவையா?இல்லையா?)என்று எழுதப்பட்டிருந்தது.

இதற்கு பின்வாறு நான் விடை கூறினேன்.(குறித்த இரு நூல்களும் , இவை தவிர இப்னு அறபீ அவர்கள் எழுதிய ஏனைய நூல்களும் வாசிப்தற்கும்,மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கும் தகுதியானவையே. அல் ஹாபிள் பர்சலீ என்பவரும் ,இன்னும் பலரும் அவற்றை வாசித்ததோடு மற்றும் நின்று விடாமல் மற்றவர்களுக்கு கற்றும் கொடுத்துள்ளார்கள்.குறிப்பாக பர்சலீ அவர்களும், இன்னும் பலரும் இப்னு அறபீ அவர்களின் நூல்களை அவர்களிடமே கற்றிருக்கின்றார்கள்.

இப்னு அறபீ அவர்கள் தங்களின் நூல்களை மற்றவர்கள் பார்வை யிடுவதற்கு பொது அனுமதி வழங்கியதற்கு ஆதாரம் உண்டு.அவர்கள் எழுத்து மூலம் அவ்வாறு வழங்கிய அனுமதியை “புதூஹாத் மக்கிய்யா”என்ற நூலில் நான் பார்த்திருக்கின்றேன்.இது “கூனியா” என்ற ஊரில் நடந்த ஒரு நிகழ்வாகும்.அதோடு அறிஞர்கள், மற்றும் ஹதீதுக் கலை நிபுணர்கள் இப்னு அறபீ அவர்களின் நூல்களை எழுதி எடுத்ததையும் – பிரதி பண்ணியதும் – நான் நேரில் கண்டிருக்கின்றேன்.

எனவே இப்னு அறபீ அவர்களின் நூலை வாசிப்பது மட்டுமே ஒரு வணக்கம் எனலாம்.இதற்கு மாறாகச் சொன்னவன் அறிவில்லாதவனும்,நல்வழியை விட்டும் நழுவியவனுமாவான்.

இறைவன் மீது ஆணையாக இப்னு அறபீ அவர்கள் வலுப்பமிகு ஒலித்தனமுள்ளவர்களும் “சித்தீக்”பதவியை அடைந்தவர்களு மாவார்கள்.இதுவே எனது கொள்கையும், எனது மார்க்கமுமாகும்.

ஆயினும் சிலர் இதற்கு மாறாக எழுதியும், பேசியும் வருகிறார்கள்.இதனால் இவர்களுக்கு நற்பாக்கியம் இல்லாமற் போய் இவர்கள் நாசமாகி விட்டார்கள்.இப்னு அறபீ அவர்கள் நபீ ஸல் அவர்களின் வழிக்கு முறணாக பேசவோ, எழுதவோ மாட்டார்கள்.ஷெய்கு அவர்களை நிராகித்தவன் – எதிர்த்தவன் என்றும் பயங்கரத்துக்குள்ளனவனேயாவான்)

وكان الشيخ سراجُ الدّين المَخْزوميُّ شيخُ الإسلام با لشّامّ يقول اِيَّاكُمْ والإنكارَ على شيئ من كلام الشيخ محي الدين، فإنّ لُحُومَ الأولياءِ مسمومةٌ وهلاكَ اَديانِ مُبْغِضِهم معلومةٌ، ومن أبْغَضَهم تَنَصَّرَ ومات على ذلك، ومن أطْلَقَ لِسانَه فيهم با لسَّبِّ إبتَلاه الله بموت القلب.

[ اليواقيت – الاول – ص ٧ – ٨ ]

சிரியா நாட்டின் “ஷெய்குல் இஸ்லாம்” என்று புகழ் பெற்ற ஸிறாஜுத்தீன் அல் மக்சூமீ (றஹ்) அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.(முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்களின் பேச்சில் எதையும் மறுக்க வேண்டாம் என்று உங்களை நான் எச்சரிக்கின்றேன்.ஏனெனில் அவ்லியாஉகளின் மாமிசம் நஞ்சூட்டப்பட்டதாகும்.அவர்களை கோபத்திற்குள்ளாக்குவோரின் மார்க்கம் அழிந்து விடும் என்பதும் அறியப்பட்ட விடயமாகும்.அவர்களைக் கோபமாக்கினவன் நஸ்றானியாக மாறி அவ்வாறே அவன் மரணித்து விடுவான்.அவர்கள் விடயத்தில் தமது நாவைப் பேணாமல் ஏசியோரை – இழித்துரைத்தோரை “கல்பு” மரணிப்பது கொண்டு அல்லாஹ் சோதிப்பான்.அவர்களின் உள்ளங்களை மரணிக்கச் செய்து விடுவான்.)

وكان أبو عبد الله القُرَشِيْ يقول : من غَضَّ من وَلِيٍّ لله غزّ وجلّ ضُرِبَ فى قلبه بسَهْمٍ مسمومٍ، ولم يَمُتْ حتَّى تَفْسُدَ عقيدتُه، ويُخَافُ عليه من سُوء الخَاتِمَة.

[ اليواقيت – الاول – ص ٨ ]

அபூ அப்தில்லாஹ் அல் குறஷீ அவர்கள்
பின்வருமாறு கூறியுள்ளார்கள்.(ஒரு வலிய்யுல்லாஹ்வை ஒருவன் குறை கண்டால்,அவரைத் தரக்குறைவாக பேசினால் அவனின் உள்ளத்தில் நஞ்சூட்டப்பட்ட அம்பு எறியப்படும்.அவன் தனது கொள்கை கெட்டுப் போகும் வரை சாகமாட்டான.அவனுக்கு கெட்ட முடிவு ஏற்படும்.)

لَحْمٌ இறைச்சி – மாமிசம் – لُحُوْمٌ

سُمٌّ விஷம் – நஞ்சு ( السُّمُّ، والسَّمُّ، والسِّمُّ ) ثلاث لغات، ج سِمَامٌ – سُمُوْمٌ
سَمَّ يَسُمُّ سَمًّا = سَقَاهُ السُّمَّ، والطَّعَامَ جَعَلَ فِيْهِ سُمًّا நஞ்சூட்டினான்

دين – أدْيَان.

اَبْغَضَ يُبْغِضُ கோபித்தான் – கோபமூட்டினான்

تَنَصَّرَ – كان نَصْرَانِيًّا – أي صَارَ نَصْرَانِيًّا –
تَهَوَّدَ – صَارَ يَهُوْدِيًّا

اَطْلَقَ لِسَانَهُ – கட்டுப்பாடின்றி நாவைப்பயன் படுத்தினான்

سَبَّ يَسُبُّ سَبًّا : ஏசினான் شَتَمَ ஏசினான்

اِبْتَلَى – சோதித்தான்

غَضَّ يَغُضُّ غَضَّا – مِن فُلانٍ وَضَعَ مِنْ قَدْرِهِ ( غَضَّ مِنْهُ )
والشَّيْئَ نَقَصَهُ தரம் குறைத்தான்

سَهْمٌ – அம்பு سِهَامٌ ، اَسْهُمٌ

والمُراد بسوء الخاتمة الموتُ على الكفر.

قال الله تعالى فى الحديث القدسيِّ مَنْ عَادَى لِيْ وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِا لْحَرْبِ، أو كما قال.

எனது வலீமார்களில் ஒருவரை யாராவது பகைத்தானாயின் அவனை என்னுடன் போர் செய்ய வருமாறு அழைப்பேன் என்று அல்லாஹ் “ஹதீதுக்குத்ஸீ” மூலம் கூறினான்.
இந்த “ஹதீதுக்குத்ஸீ”வலீமாரைப் பகைக்கின்ற அவர்களை இழிவு படுத்துகின்ற, அவர்களை தரக்குறைவாகப் பேசுகின்ற,அவர்களை நையாண்டி செய்கின்ற குறவர்கள் கூட்டத்திற்கு பெரும் எச்சரிக்கையாகும்.வலீமார்களை கிண்டல் செய்து பேசுகின்ற வஹாபிகள், இன்னுமிவர்கள் போன்ற செம்மான்கள் கடும் எச்சரிக்கயைாக இருந்து கொள்ள வேண்டும்.வலீமார் விடயத்தில் இவர்கள் தமது நாவைப் பேணிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட இறை மொழி ஹதீது மட்டுமல்ல,இது ஹதீதுக் குத்ஸியுமாகும்.அல்லாஹ்வின் குறி தவறாது.”ஆதா”என்ற சொல் “அதாவத்” , “அதுவ்வு”என்ற சொல்லடிகளைச் சேர்ந்ததாகும்.அதாவது பகைத்தல், விரோதித்தல் என்று பொருள்வரும்.

மேலே குறித்த ஹதீதுக் குத்ஸியில் -لِيْ – லீ – என்ற ஒரு சொல் வந்துள்ளது.இதற்கு “எனக்கு”என்று பொருள் வரும்.உதாரணமாக مَنْ هدَمَ لِيْ بَيْتًا எனக்குரிய வீட்டை உடைத்தவன், مَنْ سَرَقَ لِيْ قَلَمًا எனக்குரிய பேனாவை திருடியவன் என்பது போன்று.”லீ” என்ற இச்சொல் இல்லாமல் வசனம் வந்தால் – مَنْ عَادَى وَلِيًّا – யாரோ ஒரு அதிகாரியை என்று மட்டும் பொருள் வருமேயன்றி எனக்குரிய அதிகாரியை என்று பொருள் வராது.

இவ்வாறு வசனம் வந்ததற்கான காரணம் எது என்பதை அல்லாஹ்தான் அறிவான்.எனினும் இப்பாவிக்கு விளங்கிய கருத்தை எழுதாமலிருக்க முடியவில்லை.

“வலீ”என்ற சொல்லுக்கு அதிகாரி என்று பொருள் வரும்.அதிகாரம் உள்ளவன் என்று சொல்லப்படும்.ஒரு பெண்ணின் தந்தை وَلِيُّ الْمَرْأَةِ என்று அழைக்கப்படுவார்.அதாவது பெண்ணின் வலீகாரன் என்று சொல்லப்படுவான். இவ்வாறான “வலீ”யை – அதிகாரியை தவிர்ப்பதற்காக “லீ” எனது அதிகாரி என்று அல்லாஹ் சொல்லியிருக்கலாம்.

இதேபோல் اَوْلِيَاءُ الشَّيْطَانْ ஷெய்தானின் வலீமார் என்றும் ஒரு கூட்டத்தினர் உள்ளார்கள்.இவர்கள் யாரெனில் “ஷரீஆ”வும் தெரியாமல், “தரீகா”வும் தெரியாமல் இருந்து கொண்டு தம்மை வலீமார் போல் நடிப்பவர்கள்.போலி ஷெய்குமார் போன்று.இவர்களையும் தவிர்ப்பதற்காக “லீ” எனக்குள்ள அதிகாரிகள் என்ற சொல்லை அல்லாஹ் சொல்லியிருக்கலாம்.

ஏனெனில் اَوْلِيَاءُ الرَّحْمٰنۡ என்று ஒரு கூட்டம் இருப்பது போல் اَوْلِيَاءُالشّيْطَانْ என்றும் ஒரு கூட்டம் உண்டு.இது பற்றி இமாம் அப்துல் கனீ அந்நாபலஸீ (றஹ்) அவர்கள் اَلۡفَرۡقُ بَيۡنَ اَوۡلِيَاءِ الرَّحۡمٰنِ وَاَوۡلِيَاءِ الشَّيۡطَانِ றஹ்மானுடைய வலீமார்களுக்கும், ஷெய்த்தானுடைய வலீமார்களுக்கும் உள்ள வேறுபாடு என்ற பொருள்பட ஒரு நூலே எழுதியுள்ளார்கள்.

சிலர் தம்மை “ஷெய்கு” என்றும், “ஸெய்யித்” என்றும் சொல்லிக் கொண்டும் “பைஅத்”என்ற ஞானதீட்சையும் வழங்கிக்கொண்டும்,ஒன்றுமே தெரியாத அப்பாவிகளையும், அரைப் பைத்தியக்காரர்களையும் பின்னால் அழைத்துக் கொண்டும் ஊரெல்லாம் வலம் வருகிறார்கள்.தமக்கு “கறாமத்”உண்டு என்று மற்றவர்களை (புத்திகுறைந்தவர்களை,புத்தியில் “கபல்”குறைபாடுள்ளவர்களை) நம்ப வைப்பதற்காக நடிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

அசல் ஷெய்குமார்யார்? போலிகள்யார்? என்று இனம் கண்டு கொள்வதற்கு வழிகள் உள்ளன.அவற்றில் பிரதான வழிகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

وكان أبو تُراب النَّخشَبِيْ يقول [ اِذا اَلِفَ القلبُ الإعراضَ عن الله صَحِبَتْهُ الوَقِيْعَةُ فى أوليائِه ]
وقال الشيخ مجدُ الدين الفيروزابادي [ وقد رأيتُ إجازةً بِخَطِّ الشيخ كَتَبَها للمَلِك الظّاهر بِيَبْرُسْ صاحبِ حَلَبَ، ورأيت فى آخِرِها واَجَزْتُ له أيضا أن يَرْوِيَ عَنِّيْ جَميعَ مُؤلَّفاتي، ومن جُملتها كذا وكذا، حتّى عَدَّ نَيْفًا وأَرْبَعَمِأةِ مُؤلَّفٍ، منها تفسيره الكبيرُ فى خمسةٍ وتسعين مُجَلَّدًا، وصل فيه إلى قوله تعالى وعلّمناهُ من لَدُنَّا علما، فاصْطَفَاهُ اللهُ لِحَضرَتِه، ومنها تفسيرُه الصغيرُ فى ثمانية أسفارٍ على طريقةِ المحقِّقِين من المُفَسِّرين، ومنها كتابُ الرِّياضِ الفِردوسيَّةِ فى بيان الأحاديث القُدسيّة، فهل يَحِلُّ لمسلم أن يقول لا تَجوزُ مطالعةُ كتبِ الشيخ محي الدين مطلقا، ما ذَاكَ إلّا كُفْرٌ وتَعَصُّبٌ وعنادٌ ]

اَلِفَ يَاْلَفُ اَلْفًا – ه اَنِسَ به وأحبّه، والمكانَ تَعَوَّدَه واسْتَأْنَسَ به
ஒன்றை நேசித்தல்,ஒன்றை நெருங்கியிருத்தல்,ஒரே இடத்தை வழமையாக்கி அதை நெருங்கியிருத்தல்.

الإعراضُ – . புறக்கணித்தல்,அலட்சியப்படுத்தல்

الوَقِيْعَةُ – سَبَّه وعابَه واغْتابَه.ஏசினான்
இழித்துரைத்தான்,புறம்பேசினான்.

يَبْرُسْ – إسم بلد

حَلَبَ – مدينة فى شمال سُورِية، تُعرف با لشَّهباء

أجَزْتُ من اَجَازَ – اَذِنَ.

رَوَى يَرْوِي – حدّث يحدّث.

عَدَّ – எண்ணினான் , கணக்கெடுத்தான்

نَيْفٌ – الزائِدُ من واحد إلى ثلاثة، ولاتُسْتَعْمَلُ إلا بعد العُقُود،
بعد ثلاثين يوما ونَيْفٍ، وما كان من أربعة إلى تسعة
فهو بِضْعٌ.

இதன் விபரம் பின்வருமாறு.نَيْفٌ என்ற சொல் ஒன்று முதல் மூன்று வரை பாவிக்கலாம். உதாரணமாக ثَلَاثُوْنَ وَنَيْفٌ என்பது போன்று.”முப்பது சொச்சம் “என்பது இதன் பொருள்.அதாவது 31,32,33 இம்மூன்றையும் உள்வாங்கும்.ஒருவரிடம் இதை என்ன விலைக்கு வாங்கினீர் என்று கேட்கும் போது அவர் ثلاثون ونيف என்று சொன்னால் 31 ரூபாய்,அல்லது 32 ரூபாய், அல்லது 33 ரூபாய் என்று மட்டும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அவர் بِضْعٌ وثَلَاثُوْنْ என்று சொன்னால் அதாவது بِضْعٌ என்ற சொல்லை பயன் படுத்தினால் 34 முதல் 39 வரை என்று கொள்ள வேண்டும். نَيْفٌ என்ற சொல்லுக்கும்,بِضْعٌ என்ற சொல்லுக்குமுள்ள வேறுபாடு இதுதான்.ஆனால் இரண்டு சொற்களுக்கும் சொச்சம் என்றே தமிழில் பொருள் சொல்ல வேண்டும்.

அறபு மொழியில் மட்டும் இவ்வாறான விபரம் உண்டு,தமிழில் சொச்சம் என்றால் ஒன்று முதல் ஒன்பது வரையிலான தொகையை மட்டுமே குறிக்கும். உதாரணமாக 30 ரூபா சொச்சம் என்று சொன்னால் 31 முதல் 39 வரையிலான தொகையை குறிக்கும்.

அபூ துறாப் அந் நக் ஷபீ பின்வருமாறு சொல்கிறார்கள்.(மனம் அல்லாஹ்வை புறக்கணிப்பதை விரும்பினால் அவ்லியாக்களை குறைகாண்பதில் அது விழுந்துவிடும்.)

இதன் சுருக்கம். அல்லாஹ் ஒருவனை புறக்கணிக்க நாடினால் அவன் வலீமார்களை குறை காண்பான் என்பதாகும்.

மஜ்துத்தீன் பைறூசாபாதீ றழியல்லாஹு அன்ஹு பின்வருமாறு கூறியுள்ளார்கள்.(ஹலப் நாட்டின் யப்றுஸ் நகர மன்னர் அல்மலிகுள்ளாஹிர் என்பவருக்கு ஷெய்குல் அக்பர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய கடிதத்தில் தங்களின் நூல்களை பார்வையிடுவதற்கு தங்களின் கையெழுத்துடன் அனுமதி “இஜாசா”வழங்கி இருந்ததை நான் கண்டேன்.அக் கடிதத்தின் இறுதியில் தாங்கள் எழுதிய அனைத்து நூல்களையும் பார்வையிடுவதற்கும்,போதிப்பதற்கும் அனுமதி வழங்கியிருந்ததையும் நான் கண்டேன்.

சுமார் 400 சொச்சம் நூல்களின் பெயர்கள் கூறப்பட்டிருந்தன.அவற்றில் அவர்கள் எழுதிய 95 வால்யூம்கள் கொண்ட “தப்ஸீர் கபீர்” என்ற திருமறை விரிவுரை நூலும்,இறையியல் அடிப்படையில் எழுதப்பட்ட 8 பாகங்கள் கொண்ட திருக்குர்ஆன் விரிவுரை நூலும், இன்னும் “அர்ரியாழுல் பிர்தவ்ஸிய்யா பீ பயானில் அஹாதீதில் குத்ஸிய்யா” என்ற நூலும் அடங்கும்.

உண்மை விபரம் இவ்வாறிருக்கும் நிலையில் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு நாயகம் அவர்களின் நூல்ளை வாசிப்பதும்,கற்றுக் கொடுப்பதும் கூடாதென்று சொல்வது எங்கணம் ஒரு முஸ்லிமுக்கு ஆகும்?இவ்வாறு சொல்லுதல் “குப்ர்”என்ற நிராகரிப்பும்,பிடிவாதமும்,மன முரண்டுமே ஆகும்.)

நான் சிரியா சென்றிருந்த நேரம் தலைநகர் டமஸ்கஸில் உள்ள அநேக புத்தகக் கடைகளுக்கு சென்று இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் நூல்கள் யாவையும் வாங்க முடியுமா என்று விசாரித்தேன்.
அவர்கள் 900 நூல்களுக்கும் அதிகமான நூல்கள் எழுதியுள்ளார்கள்.அவற்றில் தற்போது சுமார் 150 நூல்கள் மட்டுமே எம்மிடம் உள்ளன. கெய்ரோ,லெபனான் போன்ற நாடுகளில் தேடிப்பாருங்கள் என்று அங்குள்ளவர்கள் கூறினார்கள்.

இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு நாயகம் அவர்கள் எழுதி அச்சிட்ட அநேக நூல்களை அவர்களின் எதிரிகள் பணம் கொடுத்து வாங்கி எரித்து விட்டார்கள். என்றும் சொன்னார்கள்.
அவர்களின் நூல்களிற் சில இலங்கையிலுள்ள உலமாஉகளிடம் இருக்குமென்று நான் நினைக்கின்றேன்.இருந்தாலும் கூட அவை தூசி படிந்திருக்குமென்று நான் நினைக்கின்றேன்.

ومِمَّنْ اَثْنَى عليه أيضا الشيخ فخر الدين الرَّازِي وقال: كان الشيخ محي الدين وليّا عظيما،
وسُئل الإمام محي الدين النّووي عن الشيخ محي الدين ابن عربي قال: تلك اُمَّةٌ قد خَلَتْ، ولكن الذي عندنا أنّه يحرم على كلّ عاقلٍ أن يُسِيئ الظَّنَّ بأحدٍ من أولياء الله عزّ وجلّ، ويَجِبُ عليه أن يُؤَوِّل أقوالَهم وأفعالَهم مَادَامَ لَمْ يَلْحَقْ بِدَرَجَتِهِمْ، ولا يَعْجِزُ عن ذلك إلّا قليلُ التوفيق،
قال في شرح المهذّب ثُمَّ اِذا أوَّلَ فَلْيُؤَوِّلْ كلامهم سبعين وجها، ولا نقبل عنه تأويلا واحدا، ماذاك إلّا تَعَنُّتٌ، ( ثم كلام النووي )

[ اليواقيت – الاول – ص ٨ ]

அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களைப் புகழ்ந்தவர்களில் இமாம் ஷெய்குல் இஸ்லாம் பக்றுத்தீன் றாஸீ றழியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர்.அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.(அஷ் ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் வலுப்பமிகு வலியுல்லாஹ் ஆவார்கள்.)

இமாம் முஹ்யித்தீன் அந்நவவீ றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றிக் கேட்கப்பட்டபோது பின்வருமாறு கூறினார்கள்.(அது வாழ்ந்து மறைந்து போன ஒரு சமூகம்.அல்லாஹ்வின் அவ்லியாஉகளில் எந்த ஒருவர் மீதும் தவறான எண்ணம் கொள்வது “அக்ல்” புத்தியுள்ள அனைவர் மீதும் “ஹறாம்” விலக்கப்பட்டதாகும். அவர்களின் சொல்,செயல்களுக்கு வலிந்துரை கொள்வது புத்தியுள்ள ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.அவர்களின் ஆன்மீகப் படித்தரத்தை அடையாத வரை அவர்களின் சொற் செயலுக்கு வலிந்துரை கொள்வது அவனுக்கு கடமையாகும்.அவற்றுக்கு வலிந்துரை கொள்ளாதவன் நற்பாக்கியம் அற்றவனே ஆவான்.)

மேலும் இமாம் நவவீ அவர்கள் “ஷர்ஹுல் முஹத்தப்” என்ற நூலில் (வலிந்துரை கொள்வதாயினும் எழுபது வலிந்துரையாவது கொள்ள வேண்டும்;ஒரு வலிந்துரை மட்டும் கொள்வதை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம்; அவ்வாறு கொள்ளுதல் மனமுரண்டேயாகும்.)

சுருக்கமான விளக்கம்
————————————–
அவ்லியாக்களின் சொல், செயல்கள் சிலநேரம் சிலரின் பார்வையில் “ஷரீஆ”வுக்கு முரணானது போல் தோன்றும்.ஏனெனில் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கி சிறிய வசனத்தில் சொல்லி விடுவார்கள்.அவ்வசனத்தின் வெளிப்படையான கருத்து “ஷரீஆ”வுக்கு அல்லது “அகீதா” கொள்கைக்கு முரணானதுபோல தெரியும்.அவ்வாறு தெரிகின்ற போது அந்தப் பேச்சு அல்லது அச்செயல் “ஷரீஆ”வுக்கு அல்லது “அகீதா”வுக்கு முரணானதென்று முடிவு செய்துவிடக் கூடாது.இவ்வாறு செய்தல் பெருங்குற்றமாகிவிடும்.

ஆகையால் மகான்களின் அத்தகைய சொற் செயல்களுக்கு “தஃவீல்” வலிந்துரை கொண்டு விளக்கம் எடுக்க வேண்டும்.வலிந்துரை கொண்டு விளக்கம் எடுக்கும் விடயத்தில் கூட விசாலமான போக்கை கையாள வேண்டும்.

அதாவது ஒரு வலிந்துரைக்கு அது சரியாக அமைய வில்லையானால் இரண்டாவது வலிந்துரை கொடுக்க வேண்டும்.அதற்கும் அது அமைய வில்லையானால் மூன்றாவது வலிந்துரை கொடுக்க வேண்டும்.இவ்வாறு எழுபது வலிந்துரைகள் வரை கொடுத்தேனும் அவர்களின் சொற் செயல்களை “ஷரீஆ”வுக்கு அல்லது “அகீதா”வுக்கு முரணில்லாததாக நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.எழுபது வலிந்துரைகள் கொண்டும் சரியாக அமைக்க முடியாது போனால் மட்டுமே அவர்களின் சொல் செயல்கள் பிழை என்று முடிவு செய்தல் வேண்டும்.
இவ்வாறு வலியுறுத்திக் கூறியுள்ளார்கள் சட்ட மேதைகளில் ஒருவரான,அனைத்துலக அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இமாம் நவவீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.அதோடு அவர்கள் நின்று விட வில்லை.مَاذَاكَ إلّا تَعَنُّتٌ அது மனமுரண்டேயாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதாவது பல வலிந்துரைகள் கொண்டு அவர்களின் சொற் செயல்களை நோக்காமல் ஒரு வலிந்துரையோடு மட்டும் நின்று கொள்வது மனமுரண்டாகும் என்றும் கூறியுள்ளார்கள்.

இமாம் நவவீ அவர்களின் இக்கூற்று, பின்னொரு காலத்தில் இறைஞான மகான்களின் சொற் செயல்களுக்கு வலிந்துரை கொள்ளாமல் அவர்களைத் தண்டிக்கும் ஒரு கூட்டம் வருமென்பதை இமாம் நவவீ றழியல்லாஹூ அன்ஹு முன் கூட்டியே அறிந்து சொன்னது போல் அமைந்துள்ளது.
இவ்வாறு கண்மூடித்தனமாகச் செயல்படும் “புகஹாஉ”என்ற சட்டவாதிகளுக்கு இமாம் நவவீ அவர்களின் கூற்று ஓர் எச்சரிக்கை என்றே சொல்லலாம்.

குறிப்பாக “பத்வா” வழங்கி வரும் அகில இலங்கை உலமா சபைக்கு இது ஓர் எச்சரிக்கையாகும் என்பது எனது கருத்து.இதன் பிறகு “பத்வா” வழங்குகின்ற எவராயினும் இமாம் நவவீ அவர்களின் எச்சரிக்கையை தனது கற்பனை கண்முன் நிறுத்தி “பத்வா” வழங்க எழுதுகோலை நட்ட வேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றேன்.
வலிந்துரை கொள்ள வேண்டிய இடங்களில் வலிந்துரை கொள்ளாமலும்,தீர விசாரிக்க வேண்டிய கட்டங்களில் விசாரிக்காமலும் “பத்வா” வழங்குவதால் வழங்கப்படுகின்ற “பத்வா”வை பொறுத்து முகம் கொடுக்க முடியாத குடும்பத்தில் தகராறு, அடிதடி,கொலை,கொள்ளை,வீடுகள்,கடைகளுக்கு தீவைத்தல் போன்ற பல்வேறு தீய விளைவுகள் ஏற்படுகின்றன.
பல்லாயிரம் முஸ்லிம்ள் வாழும் ஊரில் அவர்களிற் பலரை “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கப்படும் போது அவர்களுக்கு மற்றவர்களால் பல்வேறு இன்னல்கள்,தொல்லைகள் ஏற்படுகின்றன.

இதற்கு உதாரணமாக காத்தான்குடியை கூறலாம்.இங்கு 1979ம் ஆண்டு முதல் இன்றுவரை – இதே நொடி வரை – 40 ஆண்டுகளாகஒரே குடும்பத்தவர்களுக்கிடையே அடிக்கடி அடிதடியும்,பிளவும்,பிரச்சினையும் ஏற்படுகின்றன.கத்திக்குத்துகளும், துப்பாக்கிச் சூடுகளும் இடம்பெறுகின்றன.

இவ்வாறான முஸீபத்துகளுக்கெல்லாம்
அடிப்படைக் காரணம் ஒரே ஊரில் வாழும் முஸ்லிம்களிற் சிலரை “முர்தத்” மதம்மாறியவர்கள் என்று அகில இலங்கை உலமா சபை “பத்வா” வழங்கியதேயாகும். “பத்வா” வழங்கியோர் அல்லாஹ்வுக்குப் பதில் கூற தயாராக இருக்கவேண்டும்.

அன்றுமுதல் இன்று வரை இந்நாட்டில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் இருந்தும் கூட அவர்கள் எவரும் இது தொடர்பாக அரசியல் மட்டத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ றஊப் ஹகீம் அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது விந்தையான விடயமாகும்.

ஆயினும் முன்னால் பிரதி அமைச்சர் மர்ஹும் பரீத் மீரா லெப்பை அவர்களும்,இந்நாள் ராஜாங்க பிரதி அமைச்சர் M.L.A.M ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கடந்த காலங்களில் எடுத்த முயற்சிக்காக அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இவர்கள் தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டும் கூட உலமாஉகளின் விடாப்பிடி காரணமாக அவர்களும் தமது முயற்சியை கைவிட்டனர்.

உலமாஉகள் உலமாஉகளாக இருந்தால் சமாதானம் எப்பவோ நடந்திருக்கும். இனியாவது ஈமானுள்ள ஓர் அமைச்சர் இதற்கு முன்வரமாட்டாரா?

கண்ணியமிகு உலமாஉகளே!

இமாம் நவவீ அவர்களின் கருத்தை கருத்திற் கொண்டு முஸ்லிம்களின் ஒற்றுமை கருதி சற்று இறங்கிச் செயல்படுங்கள்.

وسُئل العماد بن كثير رحمه الله عَمَّنْ يُخْطِئُ الشيخَ محي الدين ابن عربي فقال ” اَخْشَى أن يكونَ مَنْ يُخْطِئُه هو المُخْطِئَ وقد أنكر قوم عليه فوقعوا فى المهالك”.

அல் இமாத் இப்னு கதீர் றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களை பிழை காண்பவர்கள் பற்றிக் கேட்கப்பட்ட போது ” அவர்களை பிழை காண்பவன் தான் பிழை செய்தவனாவான் என்றும், ஒரு கூட்டம் அவர்களை பிழை கண்ட காரணத்தால் அவர்கள் அழிவில் விழுந்து விட்டார்கள்” என்றும் கூறினார்கள்.

ومِمَّنْ اَثْنَى عليه أيضا الإمام ابن أسعد اليافِعِيُّ وصرّح بولايته العُظْمى، كما نقل ذلك عن شيخ الإسلام زكريا فى شرحه للرّوض،

ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களைப் புகழ்ந்தவர்களில் இமாம் இப்னு அஸ்அத் அல்யாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களும் ஒருவராவார்கள்.அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(ஷெய்குல் இஸ்லாம் சகரிய்யா றஹிமஹுல்லாஹ் அவர்கள் “றவ்ழ்” என்ற நூலுக்கு அவர்கள்  எழுதிய விரிவுரையில் கூறியுள்ளதை ஆதாரமாகக் கொண்டு இமாம் யாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் வலுப்பமிகு “விலாயத்” ஒலித்தனம் பெற்றவர்கள் என்று தெளிவாகச் சொல்லியுள்ளார்கள்.)

وكان اليافعيّ يُجِيْزُ رِوَايةَ كُتُب الشيخ محي الدين، ويقول [ إنّ حُكْمَ اِنكارِ هؤلاء الجَهَلَةِ على أهل الطّريق حكم ناموسة نَفَخَتْ على جبل تريد إزالتَه من مكانه بنَفْخَتِها، وقال من عَادَى اَولياءَ الله فكأنَّمَا عَادَ الله، وإن كان لم يبلغ حدَّ التّكْفِيْرِ المُوجِب للخُلود فى النّار.]

இமாம் யாபிஈ றஹிமஹுல்லாஹ்  அவர்கள்,இப்னு அறபீ நாயகம் அவர்களின் நூல்களை கற்பதையும்,கற்பிப்பதையும் ஆகும் என்று சொல்பவர்களாக இருந்தார்கள்.அதோடு பின்வருமாறும் அவர்கள் சொல்கிறார்கள். ( “தரீகா” உடைய மகான்களை மறுப்பவர்கள் சிறிய ஈ போன்றவர்களாவர். அது தான் இருந்த இடத்தில் இருந்து கொண்டு பெரிய மலையொன்றை வாயால் ஊதி அதை அகற்றுவதற்கு நினைக்கும் என்றும்,வலீமார்களை பகைப்போர் அல்லாஹ்வையே பகைக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார்கள். நரகில் நிரந்தரமாக வாழுமளவு காபிர்கள் இல்லாது போனாலும் அவர்கள் அல்லாஹ்வின் பகைவர்கள்தான்.)

أخطأ – يُخْطِئُ

خَشِيَ  –  يَخْشَى

مَهْلَكَةٌ  –  ج مهالك  அழிவு  –  நாசம்

தெளிவாக சொன்னான்  – صَرَّحَ

اَجَازَ  – يُجِيْزُ. – ஆகுமாக்கினான்

جَاهِلٌ. –  ج جَهَلَةٌ  وجُهَلَاءُ  وجاهِلون

نَامُوْسَةٌ  –  ج نَامُوْسٌ  சிறிய கொசு

ஊதினான் – نَفَخَ

اَزَالَ – يُزِيْلُ  நீக்கினான்

اَوْجَبَ – يُوْجِبُ  கடமையாக்கி வைத்தான்

خَلَدَ  يَخْلُدُ  خُلُودًا   நிரந்தரமானான்

هُوَ المُخْطِئَ – خَبَرُ يكون، اسم يكون من،

هُوَ – ضمير فصل تأكيد ،

سَبَبُ التَّمثيل بناموسة فيه الإشارة بأنّه مجنون أو أبله وأحمق،

وفى بعض الكتب وَزَغَةٌ بدل ناموسة،

وزغة –  பல்லி

قال الشيخ سراج الدين المخزومي رحمه ﷲ [ وقد شَرَح كتابَه الفصوص جماعۃ من الأعلام الشافعيّۃ وغيرهم، منهم بدرُالدين بن جماعۃ، وشاعت كُتُبُه فی الأمصار وقُرِئَتْ مَتۡنًا وشرحا فی غالب البلاد، ورَوَيۡنَاهَا بالقراءۃ الظاهرۃ فی الجامع الأمويّ وغيره بالإسناد، وتَغَالی الناسُ قديما وحديثا فی شِرائِها ونَسۡخِها، وتَبرَّكوا بها وبمؤلِّفِها لِمَا كان عليه من الزُّهد والعلم ومَحاسِن الأخلاق،
وكان أئمَّۃُ عصره من علماء الشَّام ومكّۃ كلُّهم يعتقدونه ويأخذون عنه ويَعُدُّون اَنۡفُسَهم فی بحر علمه كَلَا شَيۡئَ، وهل يُنكر علی الشيخ إلّا جَاهِلٌ أومُعانِدٌ،
وقال الفيروزابادي رحمه ﷲ بعد اَنۡ ذكر مناقب الشيخ محي الدين ثم إنّ الشيخ محي الدين كان مسكنُه الشام، وقد أخرج هذه العلومَ بالشّام، ولم ينكر عليه أحد من علمائها،
وقال أيضا وقد كان قاضی القُضاۃِ الشيخ شمس الدين الخُوَنۡجِي الشافعيُّ يَخدِمه خِدمۃَ العبيد، وأمّا قاضی القُضاه المالكي فَهَبَّتۡ عليه نظرۃ من الشيخ فَزَوَّجَه ابنته، وترك القضاءَ وتَبِعَ طريقۃَ الشيخ، وأطال الفيروزابادي فی ذكر مناقب الشيخ، ثم قال وبالجملۃ فما أنكر علی الشيخ إلّا بعضُ الفقهاء القُبۡحِ، الذين لا حظّ لهم فی شراب المحقّقين، وأما جمهورُ العلماء والصّوفيۃ فقد اَقَرُّوا بأنّه إمام اَهل التّحقيق والتوحيد، وأنّه فی العلوم الظاهرۃ فريدٌ وَحِيدٌ.

அஷ்ஷெய்கு ஸிறாஜுத்தீன் அல் மக்சூமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.( இமாம் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் புஸுஸுல் ஹிகம் என்ற நூலுக்கு “ஷாபிஈ மத்ஹப்” இமாம்களில் மிகப் பிரசித்தி பெற்ற பலர் விரிவுரை எழுதியுள்ளார்கள்.அதேபோல் இன்னும் பலரும் எழுதியுள்ளார்கள்.அவர்களில் அஷ் ஷெய்கு பத்றுத்தீன் இப்னு ஜமாஅத் அவர்கள் முக்கியமானவர்களாவர்.இந்த விரிவுரை நூல் நாடெல்லாம் பரவி அதிகமான ஊர்களில் மக்கள் படித்து வந்தார்கள். சிரியாவிலுள்ள “ஜிமிஉல் அமவீ” பள்ளிவாயலிலும், வேறு பல பள்ளிவாயல்களிலும் இந்நூல் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது.மக்கள் இந்நூலை வாங்கிப் படிப்பதிலும், இதை பிரதி செய்வதிலும் அதிவேகமாக கவனம் செலுத்தினார்கள்.அதோடு இந் நூலைக் கொண்டும்,நூலாசிரியரின் அருள் கொண்டும் “பறகத்” பெற்று வந்தார்கள்.அஷ்ஷெய்கு இப்னு அறபீ அவர்கள் அறிவு ஞானங்களிலும், நற் குணங்களிலும், மற்றும் பக்தியிலும் பிரசித்தி பெற்றவர்களாயிருந்தார்கள்.

இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் வாழ்ந்த சிரியா,திரு மக்காவின் இமாம்கள் கூட ஷெய்கு அவர்கள் மீது நல்லெண்ணம் உள்ளவர்களாக இருந்ததோடு அவர்களிடம் உயர் ஞானங்களைப் பெற்றுக் கொண்டும் இருந்தார்கள்.இவர்கள் யாவரும் ஷெய்கு அவர்களின் அறிவுக்கடலின் முன்னே தம்மை ஒன்றும் தெரியாதவர்களாகவும் கணித்து வாழ்ந்தார்கள்.ஷெய்கு அவர்களை மறுப்பவன் அறிவிலியாக இருப்பான்.அல்லது மனமுரண்டுள்ளவனாக இருப்பான் என்றும் கூறினார்கள்.

மேலும் இமாம் பைறூசாபாதீ றஹிமஹுல்லாஹ் கூறுகையில் ( ஷெய்கு முஹ்யித்தீன் றழியல்லாஹு அன்ஹுஅவர்கள் சிரியாவில் வாழ்ந்து வந்தார்கள்.அங்கேயே இறைஞானங்களையும் கூறினார்கள். அவ்வேளை சிரியாவில் வாழ்ந்த மார்க்க மேதைகளில் எவரும் அவர்களை எதிர்த்ததே இல்லை)

( அங்கு வாழ்ந்த ஷாபிஈ மத்ஹபை சேர்ந்த தலைமை நீதவான் அஷ்ஷெய்கு ஷம்ஸுத்தீன் அல் குவன்ஜீ றஹிமஹு ல்லாஹ் அவர்கள் ஷெய்கு இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அடிமைகள் போல் “கித்மத்” பணி செய்து வந்தார்கள்.அதேபோல் “மாலிகீ மத்ஹபை” சேர்ந்த தலைமை நீதவான் அவர்களும் பணி செய்து வந்தார்கள்.ஒரு நாள் ஷெய்குல் அக்பர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் அருட்பார்வை அவர் மீது விழுந்த போது தனது மகளை நாயகம் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இறுதியில் தனது நீதவான் பதவியை இராஜினாமா செய்து விட்டு ஷெய்கு அவர்களின் ஞான வழி முழுமையாக இறங்கினார்கள்.)

பைறூசாபாதீ றஹிமஹுல்லாஹ் மேலும் கூறுகையில் (ஷெய்கு இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களை தரமில்லாத சில “புகஹாஉ” சட்ட மேதைகளே எதிர்த்து வந்தார்கள்.அவர்கள் ஞானப்பானத்தை பருகுவதற்கு “நஸீப்” பாக்கியமற்றவர்களாவர்.
எனினும் இமாம்கள், அறிஞர்களில் அதிகமானவர்கள் “ஷெய்குல் அக்பர்” பற்றிக் கூறுகையில் அவர்கள் ஏகத்துவம், மற்றும் அறிவுகளில் தன்னிகரற்ற மேதை என்று கூறியுள்ளார்கள்.)

சுருக்கம்
————–

“வஹ்ததுல்வுஜுத்” மெய்பொருள் ஒன்றுதான் என்ற இறைஞானத்தை சொன்னவர்களில் அநேகர் எதிரிகளால் கடுமையாக துன்புறுத்தப் பட்டிருக்கின்றார்கள் என்பதற்கும், இன்னும் சிலர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதற்கும், வேறு சிலர் நாடுகடத்தப்பட்டும், பொருளாதார தடை செய்யப்படும் உள்ளார்கள் என்பதற்கும், இன்னும் சிலர் தலை கீழாய் தொங்கவிடப்பட்ட நிலையில் தோல் உரிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கும் பலமான வரலாறுகள் உள்ளன.

ஞான மகான்கள்
துன்புறுத்தப்பட்டதற்கு பின்னணியாக இருந்தவர்களில் மிகப்பிரதான காரணகர்த்தாக்களாயிருந்தவர்கள். “புகஹாஉ” எனும் சட்டக்கலை கற்றவர்களேயாவர்.

இதற்கு இரண்டு காரணங்கள் கூறலாம்.ஒன்று அறியாமை. மற்றது பொறாமை. சட்டக்கலை மேதைகள் சட்டத்தோடு மற்றும் நின்று கொண்டார்களே யன்றி ஸுபிஸம்,இறைஞானம் முதலான அறிவுகளை கற்றுக்கொள்ள முயற்சிக்க வில்லை. சிலர் முயற்சித்தும் அவர்களுக்கு அப்பாக்கியம் கிடைக்க வில்லை.நக்குத் தின்பதற்கும் “நஸீப்” விதி வேண்டும்.

சட்டக்கலை மேதைகளை பொறாமை விடவில்லை.இநற்கு காரணம் ஞான மாகான்கள், ஷெய்குமார், ஸுபிகள் பொதுமக்களால் கண்ணியம் செய்யப்பட்டதேயாகும். சட்டக்கலை சார்ந்தவர்கள் அவ்வாறு கண்ணியம் செய்யப்படவில்லை.

وكان الشيخ عِزُّ الدين بن عبد السلام يقول [ ما وقع إنكارٌ من بعضهم على الشيخ إلّارِفقا بضُعفاءِ الفقهاء الذين ليس لهم نصيبٌ تامٌّ من أحوال الفقراء، خوفا أن يفهموا من كلام الشيخ أمرا لا يُوافِقُ الشرعَ فَيَضِلُّوا، ولو أنّهم صحبوا الفقراء لَعَرَفُوا مُصْطَلَحَهُم وأمِنُوا من مخالفة الشريعة.]

قال شيخ الإسلام المخزومي رحمه الله [ وقد كان الشيخ محي الدين با لشّام، وجميع علمائها تَتَرَدَّدُ إليه ويَعتَرفُون له بجلالة المقدار، وأنّه أستاذ المحققين من غير إنكار، وقد اَقَامَ بين اَظْهُرِهِم نحوا من ثلاثين سنة، يكتبون مؤلّفَاتِ الشيخ ويَتَداولُونها بينهم.]

قال الإمام الفيروزابادي رحمه الله [ قد كان الشيخ محي الدين بَحْرًا لا ساحلَ له. ولمّا جَاوَرَ بمكة شرّفها الله تعالى كان البلدُ إذْ ذاك مَجمعَ العلماء والمحدّثين وكان الشيخ هو المُشَارَ إليه بينهم فى كل علم تكلّموا فيه، وكانو كلُّهم يتسارعون إلى مجلسه ويتَبرَّكون بالحضور بين يديه، ويُقرئون عليه تصانِيفَه، قال ومصنّفاتُه بخَزَائِن مكة إلى الآن أصدَقُ شاهدٍ على ماقلناه، وكان أكثرُ اشتِغالِه بمكة بسَمَاعِ الحديث وإسماعه،

وصنّف فيها الفتوحات المكّيّة، كتبها عن ظَهْر قلبٍ، جوابا لسؤالٍ سئله عنه تلميذُه بدر الحَبَشِي، ولمّا فَرَغَ منها وضعها فى سطح الكعبة المعظّمة، فأقامت فيه سنةً، ثم انْزلَها، فوجدَها كما وضعها، لَمْ يَبْتَلَّ منها ورقةٌ، ولا لَعِبَتْ بها الرّيحُ مع كثرة أمطارِ مكة ورِياحِها، وما اَذِنَ للنّاس فى كتابتها وقرائتِها إلّا بعد ذلك ]

இமாம் இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். ( சிலர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களை எதிர்த்தற்கு காரணம் இறைஞானிகளின் ஆன்மீக நிலைகளில் “நஸீப்” பாக்கியமில்லாத அரை குறையாக சட்டக்கலை கற்றவர்களின் நன்மை கருதியேயாகும்.இந்த அரைவேக்காடுகள் அவர்களின் பேச்சு “ஷரீஆ”வுக்கு முரணானதென்று விளங்கி வழிதவறிவிடாமல் இருப்பதற்காகும்.இவர்கள் இறை ஞானிகளுடன் நெருங்கி உறவாக இருந்தார்களாயின் அந்த மகான்களின் கருத்துக்கள் “ஷரீஆ”வுக்கு முரணானதல்ல என்று விளங்கிக் கொள்வார்கள்.)

ஷெய்குல் இஸ்லாம் அல் மக்ஸுமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.(ஷெய்கு இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “ஷாம்” சிரியா நாட்டில் வாழ்ந்தார்கள்.அந்த நாட்டு “உலமாஉ” மார்க்க அறிஞர்கள் அவர்களிடம் வந்து அவர்களின் உயர்வான அந்தஸ்த்தை ஏற்றுச் செல்வார்கள்.இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் எந்த ஒரு மறுப்புமின்றி பெரும் ஞானிகளுக்கே ஆசிரியராக இருந்தார்கள்.சுமார் முப்பது வருடங்கள் அவர்களுடன் வாழ்ந்தார்கள். அவ்வேளை அறிஞர்கள் அவர்களின் நூல்களை எழுதி எடுத்து தமக்கிடையே பரிமாறிக் கொள்வார்கள்.

இமாம் பைறூசபாதீ றஹிமஹுல்லாஹ் கூறுகையில் ( ஷெய்குல் அக்பர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கரை காண முடியாத கடலாக இருந்தார்கள்.அவர்கள் திரு மக்கா நகருக்கு சென்ற சமயம் மக்கா நகர் அறிஞர்களும், ஹதீதுக்கலை மேதைகளும் நிறைந்த ஊராக இருந்தது. அவ்வாறிருந்தும் இப்னு அறபீ றழியல்லஹு அன்ஹு மட்டுமே சுட்டிக்காட்டப்படுகின்ற அறிஞராக விளங்கினார்கள்.அறிஞர்கள் அனைவரும் அவர்களின் சபைக்கு வந்து அவர்கள் எழுதிய நூல்களை அவர்களிடமே கற்றுக் கொள்வதுடன் அவர்களுக்கு முன்னால் அமர்ந்திருப்பதே “பறகத்” அருள் என்று கருதினார்கள.ஷெய்குல் அக்பர் றழியல்லஹு அன்ஹு அவர்களின் நூல்களில் அதிகமானவை திருமக்கா நகரிலுள்ள களஞ்சியம் ஒன்றில் இதுவரை இருந்து வருவது குறிப்படத்தக்கது. இந்நூல்கள் நாம் கூறிவரும் விடயங்களுக்கு தகுந்த சான்றாகும். ஷெய்குல் அக்பர் அவர்கள் திரு மக்காவில் இருந்த காலத்தில் ஹதீதுக்கலை நூல்கள் வாசிப்பது கொண்டும், அவற்றை கற்றுக் கொடுப்பது கொண்டும் நேரகாலத்தை கழித்து வந்தார்கள்.)

இப்னு அறபீ றழியல்லஹு அன்ஹு அவர்கள் ” அல்புதூஹாதுல் மக்கிய்யா” என்ற நூலை மக்காவில் இருந்த காலத்திலேயே எழுதி முடித்தார்கள். விஷேட அம்சம் என்ன வெனில் அந்த நூலை எழுதி முடிக்கும் வரை உஷாத் துணை நூல்கள் எதையும் பார்க்காமல் மனனமாகவே எழுதி முடித்தார்கள்.திருமக்காவில் எழுதிய நூலாதலால் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” மக்காவில் கிடைத்த ஞானங்கள் என்ற கருத்து தொனிக்கம் வகையில் பெயர் வைத்தார்கள்.இந்நூல் தனது மாணவர் “பத்றுல்ஹபஷீ” என்பவரின் கேள்விக்கு அவர்கள் அளித்த பதிலாகும்.

( இந்நூலை எழுதி முடித்த பின் கோர்த்து கட்டப்படாமல் தனித்தாளாக இருந்த நூலை “கஃபா”வின் மொட்டை மாடியில் வைத்து விட்டு , இதிலுள்ள தாள் ஒன்றாவது மழையினால் நனைந்தாலோ அல்லது கற்றினால் பறந்தாலோ
இதை வெளியிடுவதில்லை என்று முடிவு செய்தார்கள். சரியாக ஒருவருட காலம் அது அங்கேயே இருந்தது.அந்தக்கால கட்டத்தில் திரு மக்காவில் மழையும், காற்றும் அதிகமாக இருந்தும் கூட ஒருதாள் கூட மழையில் நனையவுமில்லை, காற்றில் பறந்துவிடவுமில்லை. இதன் பிறகுதான் அந்த நூலை இறக்கியெடுத்து வாசிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள்.)

சுருக்கம்
————–

இந்நூல் “இல்ஹாம்” , “கஷ்பு” என்ற இறை உதிப்புக்களைக் கொண்டு எழுதப்பட்டதேயன்றி வேறெந்த நூலையும் ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டதல்ல. இந்நூலில் கூறப்பட்ட கருத்துக்ளுக்கு உரியவன் அல்லாஹ்வேயன்றி இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அல்ல.

قال وأمّا ما أشاعَه بعضُ المنكرين عن الشيخ عِزِّ الدين بن عبد السلام وعن شيخنا الشيخِ سِراجِ الدين البُلۡقِيۡنِيۡ أنَّهُما اَمَرَا بإحراق كتب الشيخ محي الدين فكَذِبٌ وزُوۡرٌ، ولو أنّها اُحرِقتۡ لم يَبۡقَ منها الآن بمِصۡرَ والشّام نسخۃٌ، ولا كان أحدٌ نَسَخَهَا بعد كلام هذين الشيخين وحَاشَاهُمَا من ذلك ولو أنّ ذلك وقع لم يَخۡفَ. لأنّه من الأمور العِظام، الّتي تَسِيرُ بها الرُّكۡبَانُ فی الآفاق.

(ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் நூல்களை எரித்து விடுமாறு இமாம் இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் றஹிமஹுல்லாஹ் அவர்களும், இமாம் ஸிறாஜுத்தீன் அல்புல்கீனீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் சொன்னதாக இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் எதிரிகள் பரப்பிய செய்தி பொய்யும் , புரட்டுமாகும். அவ்வாறு எரிக்கப்பட்டிருந்தால் இன்று மிஸ்ர்,ஷாம் போன்ற நாடுகளில் அவர்களின் நூல்களில் ஒரு பிரதி கூட இருக்கமுடியாது.அதோடு இவ்விரு இமாம்களும் அவ்வாறு சொல்லியிருந்தால் அதன்பின் எவரும் அந்த நூல்களை பிரதி செய்திருக்கவும் முடியாது. குறித்த இரு இமாம்களும் இவ்வாறான கீழ்த்தரமான செயலை ஒருபோதும் செய்திருக்கமாட்டார்கள்.)

وقال الشيخ سراج الدين المخزومي كان شيخنا شيخ الإسلام سراج الدين البُلۡقيِنِی، وكذلك الشيخ تقي الدين السبكي يُنۡكِران علی الشيخ ابن عربي فی بِدَايۃ أمرهما، ثم رَجَعا عن ذلك حِينَ تَحقَّقَا كلامَه وتأويلَ مراده، ونَدِما علی تَفۡرِيۡطِهِما فی حقّه فی البدايته، وسَلَّمَا له الحال فيما أشكل عليهما عند النِّهايۃ.

(ஷெய்குல் இஸ்லாம் ஸிறாஜுத்தீன்
அல்புல்கீனீ றஹிமஹுல்லாஹ் அவர்களும்,அதேபோல் அஷ்ஷெய்கு தகிய்யுத்தீன் ஸுப்கீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் தமது ஆரம்ப காலத்தில் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களை மறுத்துக் கொண்டிருந்ததாகவும்,பின்னர் அவர்களின் கருத்துக்களை விளங்கிய பின் தமது மறுப்பை அவ்விருவரும் வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும், தமது ஆரம்பகாலத்தில் அவர்களை மறுத்ததை நினைத்து வருந்தியதாகவும், இறுதிக்கட்டத்தில் தமக்கு விளங்காத விடயத்தை இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைத்து விடுபவர்களாகவும் இருந்தார்கள் என்று இமாம் ஸிறாஜுத்தீன் மக்சூமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.)

ومن جُملۃ ما قاله الشيخ سراجُ الدين البُلقيني فيه حِينَ سُئل عنه [ إيّاكُم والإنكَار على شيئ من كلام الشيخ محي الدين، فإنّه رحمه ﷲ لمّا خَاضَ فی بحار المعرفۃ وتحقيق الحقائق عَبَّرَ فی اَواخِرِ عمرِه فی الفصوص والفتوحات والتَّنَزُّلاتِ المُوصِلۃ وفی غيرها بما لا يَخۡفَی علی من هو فی درجته من اَهلِ الإشاراتِ. ثم إنّه جاء من بعده قومٌ عُمۡيٌ عن طريقته فَغَلَّطُوه فی ذلك. بل كفَّرُوه بتلك العبارات. ولم يكن عندهم معرفۃٌ با صطلاحه. ولا سَئَلُوا
من يَسۡلُك بهم إلی إيضاحه. وذلك أنّ كلام الشيخ رضي ﷲ عنه تَحۡتَهُ رُموزٌ وروابِطُ وإشاراتٌ وضَوابِطُ. وحذۡفُ مُضَافَاتٍ. هي فی علمه وعِلم أمثالِه معلومۃٌ. وعند غيرهم من الجُهَّال مجهولۃٌ ولو أنّهم نظروا إلی كلماته بدلائِلها وتطبِيۡقَاتِها وعَرَفُوا نَتَائِجَهَا ومُقَدِّماتِها لَنَالُواا لثَّمَرَاتِ المُرادۃَ. ولم يُبَائِنْ اِعتقادُهم اعتقَاده ]

அஷ் ஷெய்கு ஸிறாஜுத்தீன் அல்புல்கீனீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் கூறிய பதிலின் சுருக்கம் பின்வருமாறு.( அஷ் ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பேச்சில் எதையும் மறுக்கக் கூடாதென்று உங்கள் அனைவருக்கும் நான் எச்சரிக்கை செய்கின்றேன்.ஏனெனில் அவர்கள் இறை ஞானக்கடலில் மூழ்கி விடயங்களை திட்டமாக அறிந்த போது தங்களின் கடைசி கால கட்டத்தில் தாங்கள் எழுதிய புதூஹாதுல் மக்கிய்யா ,புஸுஸுல் ஹிகம், அத்தனஸ்ஸுலாதுல் மூஸிலா முதலான நூல்களில் தங்களின் படித்தரத்தில் உள்ளவர்கள் மட்டும் விளங்கும் பாணியில் – வகையில் இறைஞான உயர் தத்துவங்களை எழுதினார்கள்.அவர்களின் படித்தரத்தில் இல்லாதவர்களும்,பின்னால் வந்த சத்தியத்தை காணாத குருட்டுக் கூட்டமும் அவர்களைத் தவறு செய்து விட்டார்கள் என்றும்,காபிராகி விட்டார்கள் என்றும் கூறினார்கள்.இவ்வாறு சொன்னவர்கள் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களி் போக்கை புரியவுமில்லை. புரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவுமில்லை. இதற்கு பிரதான காரணம் அவர்களின் பேச்சு மிக ஆழமான தத்துவங்களை கொண்டிருந்ததும்,ஒரு கருத்தை ஜாடை மூலம் சொன்னதும், ஸுபிகள் தமக்கிடையே வைத்துக் கொண்ட கலைச் சொற்களை பயன்படுத்துவது மேயாகும்.எதிர்த்தவர்கள் மேற் சொன்னவற்றை முன் கூட்டியே அறிந்து அவர்களின் நூலைகளை பார்த்தார்களாயின் அவர்கள் கருதிய விளக்கத்தை அறிந்து கொள்வார்கள்.)

وأمّا ماأشاعه – مبتدأ . فَكَذِبٌ خبره.

ولو أنّ ذلك وقع لم يَخۡفَ – من خَفِيَ يَخۡفَی மறைத்தல்
لا من خَافَ يَخَافُ

عظيم – جمعه عِظام

تَسِيۡرُ من سار يسير பயணித்தான் – நடந்தான்

رَاكبٌ – جمعُه رُكۡبَانٌ

أفُقٌ – جمعُه آفاقٌ மேல்திசை

تَفۡرِيۡطٌ – من فَرَّطَ கவனமின்மை – பொடுபோக்கு

بِدَايَۃٌ – ஆரம்பம் ضِدُّهُ نِهَايَۃٌ கடைசி – முடிவு

اِيَّاكُمۡ والإنۡكَارَ எச்சரிக்கை வசனம்

اِيَّاكُمۡ وَالتَّدۡخِيۡنَ புகைத்தல் எச்சரிக்கை

خَاضَ – يَخُوۡضُ முங்குதல்

عَبَّرَ – يُعَبِّرُ – تعبيرا வசனம் சொல்லுதல்

آخِرٌ جمعه اَوَاخِر

اَعۡمَی جمعه عُمۡيٌ

اَبۡكَم جمعه بُكۡمٌ

اَصَمُّ جمعه صُمٌّ

غَلَّطَ – தவறென்று சொன்னான்
தவறாக்கி வைத்தான்

تَطۡبِيۡقَۃٌ جمعه تطبِيۡقات

نَتِيۡجۃٌ جمعه نَتَائجُ. முடிவு

أيّها الطالب السالك ! أذكر لك عن الشيخ محي الدين ابن عربي رضي ﷲ عنه، وعمَّنۡ أثني عليه، من الأئمّة الكبار رضي ﷲ عنهم الغفّار، لما فيه من المنافع لك أو لغيرك ممّن يكَذِّب وحدۃ الوجود، ويُفتي معتقدَها بالرِّدَّۃِ،
وإنّما اخترتُ هذاالشيخ من بين العارفين لكونه اَشۡهَرَ الأئمّة فی فنّ وحدۃ الوجود وأعرَفُهم بها، وناهِيۡكَ دليلا علی صِحّۃ وحدۃ الوجود كونُ قائِلِها وليًّا عظيما، واتِّفَاقُ اكثرِالعارفين علی ولايته، وثنائُهم عليه،
وكيف يقول الشيخ محي الدين ابن عربي رضي ﷲ عنه واَمثالُه [ كالمشائخ المشهورين بالعلوم والمعارف والولايۃ والكرامۃ.] بوحدۃ الوجود إن كانت مخالفۃً للكتاب والسنّۃ؟ مع كونهم عارفين بالله، وبأسمائه وصفاته، ومتضَلِّعِيۡنَ فی العلوم الشرعيّۃ والعلوم العرفانيّۃ، وكيف يُثني عليهم الأئمة الكِبار إن كانت عقيدتهم مخالفۃً لعقيدۃ أهل السنۃ والجماعۃ،
وقد أثني علی الشيخ محي الدين ابن عربي رضي ﷲ عنه جَمٌّ غَفِيۡرٌ من العلماء الأعلام، مع كونه ممّن صَرَّح بوحدۃ الوجود علی غيره، فثناء الأئمة عليه دليلٌ واضِحٌ كافٍ علی أنّه من الأولياء العارفين، وعقيدتُه صحيحۃٌ مقبولۃٌ، وكيف يمكن لقائل شَمَّ رائحةَ الوهّابيّۃ، وأسقطه علی الأرض حُبُّ دنياه أن يقول [ لا أقبل عقيدۃ رجلٍ تخالف الكتاب والسنّۃ، ولو مشی علی الماء – فوقه – أو تَرَبَّعَ فی الهوی، أو جلس علی النّار، ولو أثنی عليه آلافٌ من الأئمۃ والعارفين، لأنّ الميزانَ لنا لمعرفۃ الحقّ والباطل وتميِيۡزِهما هو الكتاب والسنّۃ، لا أقوالُ الأولياء وكراماتهم وآراء الأئمۃ وثنائهم عليه،

( இறைவழி செல்லும் மாணவனே! ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பற்றியும்,அவர்களைப் புகழ்ந்து கூறிய இமாம்கள் பற்றியும் உனக்கு சொல்கிறேன். இவ்விபரத்தை நான் கூறுவதால் உனக்கும் பயன் கிடைக்கும். “வஹ்ததுல்வுஜுத்” ஞானம் பொய் என்று சொன்னவர்களுக்கும்,அதை நம்பியவர்கள் “ரித்தத்” மதம் மாறிவிட்டார்கள் என்று சொல்பவர்களுக்கும் பயன் கிடைக்கும்.)

(“வஹ்ததுல்வுஜுத்” ஞானம் பேசிய பலர் இருக்கும் நிலையில் குறிப்பாக ஷெய்குல் அக்பர் அவர்களை தெரிவு செய்ததற்கான காரணம் அவர்கள் தான் “வஹ்ததுல்வுஜுத்” என்ற வாசகத்தை உலகிற்கு அறிமுகம் செய்தவர்களும்,ஆரிபீன்களில் இறையியல் தொடர்பாக மிக ஆளமாகவும், விளக்கமாகவும் பேசியவர்களும் ஆவார்கள்.
அதோடு இறையியல் துறையில் அல்புதூஹாதுல் மக்கிய்யா,புஸுஸுல் ஹிகம் போன்ற மிக ஆளமான நூல்களை எழுதியவர்களும் அவர்கள் தான்.)

( “வஹ்ததுல்வுஜுத்” ஞானம் சரியானதேயன்றி அது பிழையானதல்ல என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரம் குறித்த ஞானம் பேசுகின்றவர் அல்லது எழுதுகின்றவர் வலுப்பமிகு “வலீ”யாக இருப்பதும், இறைஞானிகளில் அநேகர் அவரை “வலீ” என்று புகழ்வதுமேயாகும்.

அஷ் ஷெய்கு இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்கள் போல் “ஷரீஆ”வின் அறிவுகளும்,இறைஞான அறிவுகளும், “கறாமத்”என்ற அற்புதமும், “விலாயத்” என்ற ஒலித்தனமும் உள்ள பிரசித்தி பெற்ற மகான்கள் அனைவரும் “வஹ்ததுல்வுஜுத்” ஞானம் பேசியும், எழுதியும் இருக்கும் நிலையில், அது திருக்குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முறணானதென்று எவ்வாறு சொல்லமுடியும்? அது பிழையான ஞானமாயிருந்தால் மேலே சொல்லப்பட்ட இறைஞானிகள் அந்த ஞானம் பேசியும் இருக்கமாட்டார்கள்.எழுதியுமிருக்கமாட்டார்கள்.)

(இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “வஹ்ததுல்வுஜுத்” ஞானம் மிகத் தெளிவாகவும்,பகிரங்கமாகவும் பேசியும்,எழுதியும் வந்தவர்கள் என்பதை இறைஞானிகள் அனைவரும் அறிந்திருந்துங் கூட அவர்களை புகழ்ந்திருப்பது அவர்கள் ஒரு “வலீ” என்பதற்கும்,அவர்களின் கொள்கை சரியானதென்பதற்கும் மறுக்க முடியாத ஆதாரமாகும்.இதுவே உண்மை. உண்மை இவ்வாறிருக்கும் நிலையில் “வஹ்ஹாபிஸம்”என்ற நாற்றக் காற்றை சுவாசித்து, “துன்யா” என்ற சேற்றில் விழுந்து அதில் புரண்டு கிடக்கும் ஒருவன் பின்வருமாறு சொல்வானாயின் அது அவனின் அறியாமையும்,மன முரண்டுமேயாகும்.

அளவுகோல் (உரைகற்கள்)
~~~~~~

ஒருவரின் கருத்து சரியானதா? பிழையானதா? என்று அளந்து பார்ப்பதற்கான அளவுகோல் திருக்குர்ஆனும் , ஹதீதுமேயன்றி தனிப்பட்ட ஒருவரின் வாழ்கையோ, சிறப்பம்சங்களோ அல்ல . விலாயத் என்ற ஒலித்தனமோ, கறாமத் என அற்புதமோ அல்ல.அவர் ஆகாயத்தில் சப்பணம் போட்டு அமர்ந்தாலும் சரியே! நீரின் மேல் நடந்தாலும் சரியே! நெருப்பின் மேல் இருந்தாலும் சரியே!)

சுருக்கம்
~~~

ஒரு கருத்து சரியானதா? பிழையானதா? என்பதை கண்டறிவதற்கான தராசு திருக்குர்ஆனும்,ஹதீதுமாகும்.இதில் மாற்றமில்லை. ஆனால் இவ்விரண்டும் மட்டும்தான் தராசு என்று ஒற்றைக்காலில் நிற்பதும்,குரங்குப் பிடியில் நிற்பதும் பெருந்தவறாகும். ஏனெனில் திருக்குர்ஆனையும், ஹதீதையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட “இஜ்மாஉ” என்பதும், “கியாஸ்” என்பதும் தராசுதான் என்று ஏற்றுச் செயல்பட வேண்டும்.”இஜ்மாஉ” என்பதும் “கியாஸ்”என்பதும் இஸ்லாம் ஏற்றுக் கொண்ட இரு அம்சங்களேயாகும்.

அவ்லியாஉகளுக்கு அல்லாஹ் வழங்குகின்ற இல்முல் இல்ஹாம், இல்முல் கஷ்ப், இல்முல்லதுன்னீ என்பனவும் இஸ்லாம் ஏற்றுக் கொண்ட அம்சங்களேயாகும். இவை பெயரளவில் மூன்றேயன்றி சாராம்சத்தில் ஒன்றுதான்.

பின்வரும் ஹதீதின் படி நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் “அஹ்லுல்பைத்” குடும்பத்தவர்களின் பேச்சும் இஸ்லாம் ஏற்றுக்கொண்ட அம்சமேயாகும்.

عن جابربن عبد ﷲ رضي الله عنه قال: رأيت رسول ﷲ صلی ﷲ عليه وسلّم فی حَجَّتِه يَوم عَرَفَۃَ وهو علی ناقته القَصۡوَاءِ يَخۡطُب. فسمعته يقول: ياأيّها الناس أنّي تركتُ فيكم مَا. إن اَخَذۡتُم به لن تَضِلُّوا. كتابَﷲ. وعِتۡرَتِيۡ اَهۡلَ بَيۡتِيۡ. [ وهذا حديث حسن غريب من هذا الوجه. وزيد بن الحسن. قد روی عنه سعيد بن سليمان. وغير واحد من أهل العلم. سنن الترمذي ] حكم الألباني صحيح.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் றழியல்லாஹு அன்ஹு பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்.(நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் “ஹஜ்” செய்த பேது “அறபா” தினம் தங்களின் “கஸ்வா” ஒட்டகத்தின் மேல் இருந்த நிலையில் பிரசங்கம் செய்தார்கள்.அவ்வேளை மனிதர்களே! நான் உங்களுக்கு ஒரு விடயத்தை விட்டுச் செல்கின்றேன்.அதை நீங்கள் எடுத்து நடந்தால் வழி தவறிவிட மாட்டீர்கள்.ஒன்று- திருக்குர்ஆன்,மற்றது எனது “அஹ்லுல்பைத்” குடும்பம்.என்று சொல்ல நான் கேட்டேன்)

இந்த நபீ மொழியின் படி “அஹ்லுல்பைத்” நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தவர்களின் பேச்சு,வழிமுறை என்பவையும் இஸ்லாம் ஏற்றுக் கொண்ட அம்சங்களேயாகும்.

عن العرباض بن ساريۃ رضي الله عنه: عن النبيّ صلّیﷲ عليه وسلّم قال: عليكم بِسُنَّتِيۡ وسُنَّۃِ الۡخُلَفَاءِ الرَّاشِدِيۡنَ من بعدي. [ السنۃ مروزي. شرح مشكل الآثار. شرح معانی الآثار. الشريعۃللآجري. جامع بيان العلم وفضله. شرح السنّۃ للبغوي. سنن أبي داؤود. الإبانۃ الكبری لابن بطۃ ]

இர்பாழுப்னு ஸாரியா றழியல்லாஹு அன்ஹு பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்.( நபீ ஸல்லல்லாஹு அலஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். எனது வழிமுறையையும், எனக்குப் பின்னாலுள்ள நல்வழி பெற்ற கலீபாஉகளின் வழிமுறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.)

இந்த நபீ மொழியின் படி நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நான்கு கலீபாஉகளின் வழிமுறையும் இஸ்லாம் ஏற்றுக் கொண்ட அம்சமாகும்.

எனவே திருக்குர்ஆனையும், ஹதீதையும் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்வது போல் அவ்லியாஉகளுக்கு வழங்கப்பட்ட “இல்ஹாம்” என்ற அறிவையும், “அஹ்லுல்பைத்” நபீ ஸல்லல்லாஹு அவலஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தவர்களின் வழிமுறையையும், நான்கு கலீபாக்களின் வழிமுறையையும் ஆதாரங்களாக ஏற்றுச் செயல்பட வேண்டும்.

தொடரும்….

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments