Thursday, April 18, 2024
Homeநிகழ்வுகள்24வது வருட ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரியின் தொகுப்பு

24வது வருட ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரியின் தொகுப்பு

முத்துப் பேட்டை ஜாம்புவான் ஓடையின் நல்லாட்சி செய்யும் வைத்தியக் கலாநிதி ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவாக 24வது வருட மகா கந்தூரி காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 06.03.2015 வெள்ளிக் கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

அன்றைய தினம் பி.ப 05.00 மணியளவில் பெரும் திரளான மக்கள் வெள்ளத்துடன் அன்னார் பெயரிலான கொடியேற்றும் நிகழ்வு பள்ளிவாயல் முன்றலில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மஜ்லிஸ் மண்டபத்தில் கத்முல் குர்ஆன் மஜ்லிஸ் நிகழ்வும் நடந்தேரியது.
வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய தினங்களாக நடைபெற்ற கந்தூரி நிகழ்வுகளில் மிகச் சிறப்பான முறையில் மௌலித் மஜ்லிஸ்கள், சன்மார்க்க உபன்னியாசங்கள் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
இறுதித் தினமான ஞாயிற்றுக் கிழமையன்று பெரிய துஆ ஓதப்பட்டு இனிதே ஸலவாத்துடன் கந்தூரி நிறைவு பெற்றன.
யாஅல்லாஹ்! வைத்திய மேதை ஷெய்கு தாவூத் வலி்ய்யுல்லாஹ் அன்னாரின் பொருட்டைக் கொண்டு எங்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் நோய் நொடிகளையும், எங்கள் தௌஹீத் கூட்டத்தின் நோய்களையும் நீக்கி வைப்பாயாக!
 –

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments